Friday, January 20, 2012

நான் மனிதனா?


கேட்காமலேயே எனக்காக கிடைத்தது
என் ஜனனம்

அன்று நான் மகன்,எனக்கான முதல் அடையாளம்

அக்கணம் தொட்டு, நினைவை எட்டும்
வரையிலான தூரமே என் முதற் பயணம்

பழுதற்ற மூளையை பழுதாக்க எண்ணி
பயணித்த இடமோ வகுப்பறை
அன்று நான் மாணவன்

என்னினைவைச் சுமந்த இதயம் கலப்படமானது
மற்றொருவரின் நினைவைச் சுமக்க பணிந்தபோது
அன்று நான் காதலன்

"வெறுமையுடன் இருந்தால் வறுமை எஜமானகிவிடும்"
வெறும் கையை செல்வம் சுமக்க வைத்தபொழுது
நானோ உழைப்பாளி

சுயநலத்தை துறந்து பொதுநலத்தை அடைய
எல்லைக்கு புறப்பட்ட பொழுது
நான் வீரன்

இதுவரை உடுத்திய அடையாளங்கள் குறைவே
இனி உடுத்த போகும் அடையாளங்களோ பற்பல

இறந்த பின்பு நான் பிணம்

இறந்தும் பலர் மனதில் வாழ்ந்தால்
அன்று தான் நான் மனிதன்!!!

No comments:

Post a Comment