இரவு என் செயல்களை
மற்றவர்கள் நோக்காமல் மறைக்கின்றது
புரண்டு படுத்தும் உறக்கக்
கதவுகளை தட்ட முடியவில்லை
நினைவுத் தீவில் தனி
ஆளாய் நான்
ஒவ்வொரு நினைவுகளும் முந்திக்கொண்டு
எனை மேவுகின்றன
நினைவுகளைக் கொன்று நித்திரையை
அடையும் முயற்சியில் மீண்டும் தோற்றேன்
எனை ஆட்டிப்படைக்கும் சக்தியிடம்
மன்றாடினேன் நித்திரையை கொடு என்று
நினைவுகளோ ஏளனம் செய்தன
என் தவிப்பைக் கண்டு
மீண்டும் முயற்சிக்காமல் நினைவுகளின்
பாதையில் பயணித்தேன்
நடுநிசியை கடந்தபொழுது
நினைவுகள் சற்று வலுவிழந்து
அரைத் தூக்கம் எனை ஆட்கொண்டது
சூரியவொளி தீண்டியதும் முழித்துகொண்டேன்
கண்களைக் கண்ணீர் சுடாமல்
உள்ளுக்குள் அழுதேன்
நிம்மதியான உறக்கம் கிடைக்காதவனாய்
என்ன ஆன போதும்
இரவும் நானும் நண்பர்களே
என் தவிப்பை எவரும் காணாமல்
மூடி மறைப்பதினால்...
வதையை வர்ணிக்கும் அழகு அருமை
ReplyDeleteமிகவும் அழகிய கவிதை, எண்ணம், எழுத்துக்கள்
ReplyDeletenice..!!!
ReplyDelete