தூவானம் எனை தழுவியதை நீ கொடுத்த முதல் முத்தத்தில் உணர்ந்தேன்,
இருள் மேகங்கள் என் வாழ்வில் விலகியது உன் சிரிப்பால்,
பாதை இல்லாத என் வாழ்வில் வழியாக வந்தது உன் வார்த்தைகள்,
நான் நவில்ந்தது எல்லாம் கவிதையானது தோளருகில் நீ இருந்தபோது,
சூரிய ஒளியின்றி பூமியில்லை நானும் இல்லை உன் பார்வையின்றி,
சலனமின்றி வாழ்வில் வந்தாய் அர்த்தம் சேர்த்தாய் முழுமையடைந்தேன்,
கண்ணில் காண முடியாத பாசத்தை நெஞ்சில் நிறுத்தினாய் சோகம் விலகியது,
விரைவாக முடியாதா??? என்றெண்ணிய வாழ்க்கை முடிவின்றி போகட்டும் என துதிக்க வைத்தாய்,
பாறைபோல் இருந்தேன் பறவை போல் பறக்க வைத்தாய்,
பார்க்கும் இடமெங்கும் உன்முகம்,நினைத்தால் கலங்கும் நீ இல்லாத வாழ்வை,
நீயென் அருகில் இருந்தால் புயல் கூட தென்றல்,இல்லை என்றால் பூக்கள் கூட கற்கள்,
பறந்துவிடாதே பாதியில் பரமபதம் அடைந்து விடுவேன்!!!
தாயை மீறிய பாசமா என்ற கேள்விக்கு விடையாக வந்தவள் நீ,
தனிமையில் சிரிக்க வைத்தாய்,விழியிலே நின்று நித்திரை கெடுத்தாய்,
வானத்தில் நடக்க வைத்தாய்,வாலிபம் சிலிர்க்க வைத்தாய்,
என்னவளே, என் வாழ்வின் முடிவிடம் உன் மடிதான்....