Tuesday, October 26, 2010

நீ வராமலே இருந்திருந்தால்!!!

என் கண்கள் உனைக் காணாமல் இருந்திருந்தால்...
என் இதயம் உனை நேசிக்காமல் இருந்திருந்தால்...
என் கைகள் உனைப் பற்றாமல் இருந்திருந்தால்...
என் கால்கள் உன்னுடன் நடக்காமல் இருந்திருந்தால்...
என் மடி உனைத் தாங்காமல் இருந்திருந்தால்...
என் குருதி உனைக் கண்டு கொதிக்காமல் இருந்திருந்தால்...
என் சிந்தனை உனைப் பற்றி இல்லாமல் இருந்திருந்தால்...
என் கனவில் நீ வராமலே இருந்திருந்தால்...
என் உலகமே நீயென இல்லாமல் இருந்திருந்தால்...
நான் இன்று பைத்தியம் ஆயிருக்கமாட்டேன்!!!