Tuesday, October 26, 2010

நீ வராமலே இருந்திருந்தால்!!!

என் கண்கள் உனைக் காணாமல் இருந்திருந்தால்...
என் இதயம் உனை நேசிக்காமல் இருந்திருந்தால்...
என் கைகள் உனைப் பற்றாமல் இருந்திருந்தால்...
என் கால்கள் உன்னுடன் நடக்காமல் இருந்திருந்தால்...
என் மடி உனைத் தாங்காமல் இருந்திருந்தால்...
என் குருதி உனைக் கண்டு கொதிக்காமல் இருந்திருந்தால்...
என் சிந்தனை உனைப் பற்றி இல்லாமல் இருந்திருந்தால்...
என் கனவில் நீ வராமலே இருந்திருந்தால்...
என் உலகமே நீயென இல்லாமல் இருந்திருந்தால்...
நான் இன்று பைத்தியம் ஆயிருக்கமாட்டேன்!!!

Monday, April 5, 2010

சொர்க்கம்...

தென்னங் குரும்பை அரும்ப,
கீற்றோ கீதம் இசைக்க,
செங்கதிரோன் செங்கம்பளத்தால் ஆழியை அணைக்க,
இருள் இறந்து ஒளி பிரசவிக்க,
ஆலய மணி காற்றுடன் கலக்க,
பலாச் சுவையை பறவைகள் சுவைக்க,
வலை ஏற்றி வள்ளம் கடலிறங்க,
ஊர்வன உள்வராமல் முற்றத்தில் கோலம் காக்க,
பெற்றவளின் கைகள் புதல்வனை தட்டி எழுப்ப,
நித்திரை என்ற மரணம் கலைந்து,
புத்துயிர் பெற்றன கண்கள்....
இவையாவும் அறியா நகரம் நரகமே...