பிரிவுகள் விடாது துரத்தும்
பயம் கொண்டால் பாதை இல்லை
படிகளை செதுக்கி ஏறு
போகும் வழியில் முட்கள் நூறு
வீழும் வலியை தாங்காவிட்டால்
மழைத் துளி என்றும் ஆறாகாது
உறைவிடம் சேறாயினும்
தாமரை வெளியில் அழகுதான்
வலியின் மாயானத்தில் கிடக்கப் பழகு
அதி சக்தி மனதில் குடியேறும்
தோல்வி உனை வீழ்த்தும் சக்தியாயின்
வெற்றி என்றும் மற்றொருவனுடயதே
வாங்கிய அடிகளை படியாக்கு
தோல்விகள் கூட சூன்யம் ஆகும்
காலக் கணக்குகளை தீர்க்கும்
சூத்திரத்தைக் கற்றுக்கொள்
எதிர்க்கும் சக்திகள் கூட செயலிழக்கும்
இல்லை என்ற ஒன்று மட்டுமே
இவ்வுலகில் இல்லை
போதியவற்றை இங்கிருந்து எடுத்துக்கொள்
ஏனையவற்றை அங்கேயே விட்டுவிடு
தேடல்கள் உள்ள இதயம் இவ்வுலகில் ஏராளம்
மழை நதியாக மாறினும்
அதன் செயல் ஒன்றுதான்
உரு மாறினாலும் மனம் மாறாதே
முடிச்சுக்கள் அவிழ்க்கப் படும்வரையில்தான்
உள்ளத்திற்கு கிளர்ச்சி ஊட்டப்படும் தருணங்கள்
தேடல்கள் உள்ள வரையில்தான்
உடலில் இயக்கம் இருக்கும்...
Every line has best of thoughts... Its very very nice
ReplyDeletenice....
ReplyDelete