Tuesday, April 17, 2012

அரைக்கருநிறப் பொழுது...


இன்று உன் முகம் காணாமலேயே
அந்திவேளை கடக்கின்றது,
இறந்தது இந்நாள் மட்டும் அல்ல
உனைக் காணாத நானும்தான்,
அரைக்கருநிறப் பொழுது முள்ளாய் நெருடியது,
இவ்வேளையிலோ வலியின் வெளிப்பாடு
அரக்கத் தனம் அடைகின்றது,
தனிமையும் மாலைவேளையும் இணைவதுதான்
காதலில் நரக நொடிகள்,
நிலவில் உன் முகம் தெரிந்தால்
மீண்டும் பிறப்பேனோ...
அமாவாசை இருள் என்னிறப்பை நீட்டிக்குமோ...
உன் முகம் காணவும்
மீண்டும் பிரசவிக்கவும்
ஒரு முழு இரவைக் கடக்க வேண்டிய கட்டாயம்,
இதுநாள் வரையில் நித்திரையுடன்
மென்மையாய் கடந்த என் இரவுகள்,
இன்று ஏனோ நடை பழகும்
குழந்தை போல் நகர்கின்றது,
காதலில் வலியா இல்லை காதலே வலியா
என்ற குழப்பமும் எனைச் சூழ்ந்துகொண்டது
மறுபிறவி எடுக்கும் முயற்சியில்
இப்பொழுது நான்!!!

No comments:

Post a Comment