Friday, August 19, 2011

ஓவியா...
















சின்னஞ் சிறு சித்திரமே காண்பவரை மயக்கும் பூமுகமே,
நடமாடும் சிலை நீயே தரைமேல் தவழும் பால்நிலவே,
என்றும் மறையாத வானவில்லே பனி படர்ந்த ரோஜாவே,
திரைகடல் காணாத முத்தே நாகம் உமிழ்ந்த வைரமே...

மங்காத சிரிப்பலையே சோகம் விலக்க வந்த மதுநீயே,
அடங்காக் குறும்பின் முகவரியே அணைக்கச் சலிக்காத பாவையே,
மழலையின் அட்சய பாத்திரமே தேயாத பிறையும் நீயே,
கபடமற்ற மழலைப் பேச்சிலே புதுச்சொற்கள் ஜனனித்தது தமிழுக்கே!

மாதவம் செய்துபெற்ற வரம்நீயே தெய்வங்கள் காணாத சந்நிதியே,
வானகம் விட்டுவந்த நட்சத்திரமே தூளியில் உறங்கவந்த பேரின்பமே,
தாய்மை வரைந்த ஓவியமே தாய் தகப்பனின் உலகமே,
பூலோகம் போற்ற வீற்றிரு மங்காமல் என்றும் ஒளிர்ந்திடு...

1 comment:

  1. superb da..
    romba nalla vara arambichuruchu ippa unnoda ella postum.romba periya munnetram theriuthu

    Suresh

    ReplyDelete