Tuesday, August 16, 2011

மூன்றெழுத்தில் ஓர் உலகம்!

நீருக்குள் மூழ்கியிருந்தபோதும் நமக்காக
சுவாசித்த ஓர் இதயம்,
நீந்தியெங்கும் போய்விடாமல் இருக்க
தொப்புள் கொடியாய் ஓர் நங்கூரம்,
சுவாசிக்க கற்றுக்கொடுத்த ஓர் சுவாசம்,
கண் விழிக்கும்வரையில் கண் மூடாமல்
இருந்த ஓர் இதயம்,
வெளிவந்தபின் குருதியை உணவாய்த்
தந்த ஓர் உணவுக் கூடம்,
சுடலை வரையிலான ஓர் கானம்,
இதுவே என் பிறப்பின் பாடம்,
அம்மா எனும் மூன்றெழுத்தே என் உலகம்...

3 comments: